நடிகர் அசோக் செல்வன் ‘நாய்’ என குறிப்பிட்டது இந்த விமர்சகரையா?
நடிகர் அசோக் செல்வனுக்கும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கும் ட்விட்டரில் கருத்து மோதல்.
சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது இவர் நடிப்பில் இந்தாண்டு பல படங்கள் வெளியானது. சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
பிரபல யூடியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன் ‘ஆண்டி இந்தியன்’ படத்தினை இயக்கியுள்ளார். அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தாண்டு 5 தோல்வி படங்களை தந்தவர் அசோக் செல்வன் என குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிக்க: அஜித் முதுகுல குத்திட்டாங்க: ரசிகர்கள் கிண்டல் !
Advertisement
Advertisement
இதன் பதிலடியாக நடிகர் அசோக் செல்வன், “குரைக்கின்ற நாய்கள் குரைக்கட்டும். முன்னேறி செல்வோம். தானாக உருவானவன்” என புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார். ரசிகர்கள் அசோக் செல்வனுக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?
பின்னர் இந்த பதிவுக்கு எதிரொலியாக ப்ளூசட்டை மாறன், “ ட்வீட்டுகளின் மூலமாக குறைப்பது சரியில்லை தம்பி. தயாரிப்பாளர்களின் பணத்தை வீணாக்க வேண்டாம். ஒரே வருடத்தில் 5 தோல்வி படங்களை தருவது மிகப்பெரிய சாதனைதான். வேறு எந்த நடிகர்களாலும் இதை செய்ய முடியாது. உங்களது திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். படங்களின் தரம் முக்கியம். எண்ணிக்கை முக்கியமல்ல. பிஸ்கட்டுக்கு மகிழ்ந்திரு” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் கீழ் விமர்சகர் ப்ளுசட்டை மாறனை ரசிகர்கள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.