ஜெயிலர் - 2 படப்பிடிப்பு தொடங்கியது! அதிகாரபூர்வ அறிவிப்பு!
ஜெயிலர் - 2 படப்பிடிப்பு தொடர்பாக....
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 10) தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். இதனிடையே, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சனுடன் ஜெயிலர் - 2 படத்தில் இணைந்தார். முன்னதாக, ஜெயிலர் - 2 படத்தின் அறிவிப்பு விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
Advertisement
Advertisement
அதில், ரஜினியின் ஆக்ஷன் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தன.
இதையும் படிக்க: நான் இசை தெய்வமல்ல, சாதாரண மனிதன்தான்: இளையராஜா
சென்னையில் ஜெயிலர் - 2 படப்பிடிப்புக்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று(மார்ச் 10) படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாள்கள் படமாக்கப்படவுள்ளது. இதன் பின்னர் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
ஜெயிலர்-2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.