FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மருத்துவம்

ரத்த அழுத்தம் உட்படப் பல சிக்கலான நோய்களைத் தீர்க்கும் உருளைச் சாறு!

நீரிழிவு, இரைப்பைப் பிரச்சனை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தீரவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம்...

Updated On : 1 ஜூலை 2017, 5:38 pm IST
பகிர்:


நீரிழிவு, இரைப்பைப் பிரச்சனை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எவ்வளவு முயற்சி செய்தும் தீரவில்லை என்று வருந்துகிறீர்களா? கவலை வேண்டாம் உங்கள் சமையலறையில் பொதுவாக இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுலபமாக இதற்குத் தீர்வு காணலாம்.

உருளைக்கிழங்கின் சாறு வெறு எந்தச் சிகிச்சையை விடவும் அதிகமான நன்மையைப் பயக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நீரிழிவு நோய், புற்றுநோய், கஸ்டரிடிஸ் எனப்படும் இரைப்பையில் ஏற்படக்கூடிய புண், ரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கலான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆகச்சிறந்த தீர்வாக அமையும் உருளைக்கிழங்கு சாறு.

காலை உணவு, சிற்றுண்டி மற்றும் இரவு உணவு போன்றவற்றை உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி உருளைச் சாற்றை குடிநீருடன் சேர்த்து பருகிவந்தால் போதும். சிக்கலான நோய்கள் மட்டுமின்றி தொப்பையையும் இது கரைத்துவிடும். 

Advertisement

Advertisement

உருளைக்கிழங்கு மிகவும் ஆரோக்கியமான மற்றும் அதிகமான பயன்களைக் கொண்ட உணவு, இரைப்பை அழற்சியைச் சரி செய்யும் சிறந்த மருந்தாக விஞ்ஞானிகள் கருதுவது இந்த உருளைக்கிழங்கு சாறைதான். இதில் உள்ள அமிலம் உடலில் உள்ள குலுக்கோஸ் அளவைக் குறைத்து நீரிழிவு நோய்க்குச் சிறந்த மருந்தாக அமையும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

பௌத்த துறவியான டோமிசாவா என்பவர் “எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும் கவலைப்பட ஒன்றுமே இல்லை உருளைக்கிழங்கு சாற்றை ஒரு தேக்கரண்டி தினசரி உண்டு வந்தால், புற்றுநோய் முற்றிலும் குணமாகும்” என்று கூறியுள்ளார். 

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் வேகவைத்த உருளைக்கிழங்கின் கலவை எலிகளின் டியூமரை கட்டுப்படுத்தியதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி ஏற்படும் தலைவலியை இது சரி செய்யக்கூடியது. பதப்படுத்தப்படாத உருளைக்கிழங்கின் சாறு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக் கூடியது.

உருளைக்கிழங்கு சாற்றின் நன்மைகள்:

  1. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  2. உடலில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றக் கூடியது.
  3. தோல் நோய்களுக்குச் சிறந்த சிகிச்சையாக அமையும்.
  4. இரைப்பை அழற்சி மற்றும் பிற அடிவயிறு பிரச்னைகளை தீர்க்கக் கூடியது.
  5. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் உறுப்பு கோளாறுகளை சரி செய்ய வல்லது.  
  6. இதய நோயிலிருந்து இதயத்தை பாதுகாக்கக் கூடியது.
  7. சூடான உருளைக்கிழங்கு பல ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்களின் அசல் ஆதாரமாக இருக்கிறது. 

உருளைக்கிழங்கு சாறு தயாரிக்கும் முறை:

  • முதலில் உருளைக்கிழங்கைக் கழுவி அதன் மேற்தோலை உரித்தெடுக்க வேண்டும்.
  • மெல்லிய துண்டுகளாக நறுக்கி, சாறு இயந்திரத்தில் போட வேண்டும்.
  • தேவைப்பட்டால் இந்தச் சாற்றுடன் ஆப்பிள் மற்றும் பீன்ஸ் சாற்றைக் கலந்து குடிப்பது சுவையை அதிகரிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments