விஜயதசமி: குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் ராகுல் காந்தி வாழ்த்து!
நாடெங்கும் இன்று விஜயதசமி (தசரா) கொண்டாடப்படுவதால் அதை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
நாடெங்கும் இன்று விஜயதசமி (தசரா) கொண்டாடபடுவதால் அதை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் .
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ' மகிழ்ச்சி பொங்கும் இந்த தசரா நன்னாளில், என்னுடைய சக இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வாழ்த்து செய்தியில், ' அனைவருக்கு விஜயதசமி வாழ்த்துக்கள்' என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தனனுடைய டிவிட்டர் பக்கத்தில், ' அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் ' என்று பதிவு செய்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.