FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொலை

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஒருவன் இந்திய ராணுவத்தால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான்.

Updated On : 16 ஆகஸ்ட் 2017, 7:35 pm IST
பகிர்:

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள புல்வாமா என்ற இடத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய ராணுவத்தில் இருந்து தக்க பதிலடி அளிக்கப்பட்டது. 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதிகளில் ஆயூப் லேல்ஹாரி என்பவன் இந்திய பாதுகாப்புப் படையால் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டான். இதனை இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், 3 பயங்கரவாதிகள் வரை இதில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

முன்னதாக, ஹர்கத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரின் ஹந்த்வாரா என்ற இடத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சோஃபியன் பகுதியில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிசாபுல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி யாசின் உட்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் காஷ்மீர் பிரிவு தளபதி மெஹமுது கஸ்னவி அதே இடத்தில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இதுபோல சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் சர்வதேச பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments