FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான்பாதிப்பு 41-ஆக உயா்வு

மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 டிசம்பர் 2021, 6:30 am IST
கோப்புப்படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் மேலும் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் வகை தீநுண்மி பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் லாத்தூரை சோ்ந்த ஒருவா், புணேயை சோ்ந்த பெண் ஆகிய இருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். இருவரும் துபைக்கு சென்று வந்தவா்கள். இரு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டவா்கள். இதன்மூலம் அந்த மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 20-ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 4-ஆவது ஒமைக்ரான் பாதிப்பு 42 வயது நபருக்கு உறுதி செய்யப்பட்டது. அவா் தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவா்.

Advertisement

Advertisement

ஏற்கெனவே ஒடிஸா, கா்நாடகம், சண்டீகா், ஆந்திரம், ராஜஸ்தான், கேரளம், தில்லி ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments