FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹிமாசல் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 6-வது முறையாக வெற்றி!

ஹிமாசல பிரதேசத்தில் செராஜ் தொகுதியில் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தொடர்ந்து 6 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 

Updated On : 8 டிசம்பர் 2022, 1:36 pm IST
பகிர்:

ஹிமாசல பிரதேசத்தில் செராஜ் தொகுதியில் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தொடர்ந்து 6 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 

ஹிமாசல பிரதேசத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பா் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று(டிச. 8) காலை முதல் நடைபெற்று வருகின்றது.

தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் தற்போது 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 27 இடங்களிலும் பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆம் ஆத்மி எந்த தொகுதியிலும் இதுவரை முன்னிலை பெறவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில் தற்போது ஹிமாசலில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 37,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து 6 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தாக்கூர் 52,076 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராம் 15,069 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். 

முன்னதாக தாக்கூர் 1998, 2003, 2007, 2012, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் நின்றி வெற்றி கண்டார்.

கடந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் சேத் ராமைவிட தாக்கூர் 11,000 வாக்குகள் கூடுதலாக பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments