FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஹைதராபாத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

2 பிப்ரவரி 2024, 5:18 pm IST
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று(சனிக்கிழமை) மாலை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக மல்லிகாா்ஜுன காா்கே தோ்வு செய்யப்பட்ட பிறகு புதிய செயற்குழுவை அக்கட்சி அமைத்துள்ளது.

இதையடுத்து புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Advertisement

Advertisement

நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் செயற்குழுவின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

செயற்குழுவின் விரிவான கூட்டம் நாளை(செப். 17) நடைபெறுகிறது. இதில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள். இதற்கு 159 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் 149 பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாளை தெலங்கானாவில் நடைபெறவுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொதுக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments