FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஆம் ஆத்மியின் இறுதிகட்ட வேட்பாளா் பட்டியல்: நியூ தில்லி தொகுதியில் கேஜரிவால் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுகிழமை வெளியிட்டது.

Updated On : 15 டிசம்பர் 2024, 4:58 pm IST
அரவிந்த் கேஜரிவால்(கோப்புப்படம்)
பகிர்:

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அடங்கிய இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுகிழமை வெளியிட்டது.

அதில் நியூ தில்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தற்போதைய முதல்வர் அதிஷி மீண்டும் கல்காஜியிலும், சௌரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.

தில்லி சட்டப்பேரவையின் 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க ஆளும் ஆம்ஆத்மி கட்சி தற்போது இருந்தே தயாராகி வருகிறது.

Advertisement

Advertisement

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அக்கட்சி ஏற்கெனவே 3கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

குகேஷுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ சிசோடியா ஜங்புரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

அதாவது மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்ற பெற முடியவில்லை. தொடர்ந்து அரவிந்த் கேஜரிவால் தில்லி முதல்வரானார்.

பின்னர் தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கேஜரிவால் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

அதைத்தொடர்ந்து தில்லி முதல்வராக அதிஷி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments