FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வயநாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: ராகுல் காந்தி

வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 செப்டம்பர் 2024, 4:24 pm IST
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
பகிர்:

வயநாடு மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து படிப்படியாக மீண்டு வருவதாகவும், அங்கு சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் சில கேரள காங்கிரஸ் தலைவர்களுடன் காணொளி வாயிலாக சந்திப்பு நடத்தினார். அந்தச் சந்திப்பில் வயநாட்டில் நடைபெறும் நிவாரணப் பணிகள் குறித்தும், சுற்றுலாத் துறையை மீட்பது குறித்தும் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மோசமான நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு, இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கும் நிலையில், நிவாரணப் பணிகளில் அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இருப்பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் வயநாடு மக்களுக்கும் பெரிதும் உதவுக்கூடிய முக்கிய அம்சமான சுற்றுலாவை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மழை ஓய்ந்தவுடன் வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து, மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”நிலச்சரிவு ஏற்பட்டது வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. முழு ஊரிலும் அல்ல. பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தளமான வயநாடு விரைவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க இருக்கும் பயணிகளை ஈர்க்கத் தயாராகும்.

அழகான வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு கடந்த காலத்தைப் போலவே மீண்டும் ஆதரவை வழங்கவேண்டும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments