FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அமாவாசை முடிந்த பிறகே கர்நாடக அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு!

அமாவாசை நிறைவடைந்த பிறகே கர்நாடகத்தின் புதிய அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படும் எனத் தகவல்...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 11:33 am IST
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - (கோப்புப்படம்)
பகிர்:

கர்நாடகத்தில், முதல்வர் டி.கே. சிவகுமார் அரசின் புதிய அமைச்சர்களுக்கு அமாவாசை நிறைவடைந்த பின்னரே துறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல்வராகப் பதவி வகித்து வந்த சித்தராமையா கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 3 ஆம் தேதி கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதிதான் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், புதன்கிழமை (ஆக. 12) அமாவாசையின் தாக்கங்கள் நிறைவடைந்த பின்னரே முதல்வர் சிவகுமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன், புதன்கிழமை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மையில் ஜோதிட ரீதியான நம்பிக்கையா அல்லது துறை ஒதுக்கீட்டை மேலும் தாமதப்படுத்துவதற்கான யுக்தியா என்று அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் வியாழக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இன்று நள்ளிரவுக்கு மேல் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டால், பேரவையில் எழுப்பப்படும் துறைகள் குறித்த கேள்விகளுக்கு உரிய விளக்கம் கிடைக்குமா எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, கர்நாடகத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் ஜனதா தளம் இடையே முக்கிய முடிவுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு சுப முகூர்த்தத்தைப் பின்பற்றும் வழக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

summary

Reports indicate that portfolios will be allocated to the new ministers of Karnataka only after the *Amavasya* (new moon) period concludes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments