எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான காவல் துறையின் தாக்குதல், அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவையில் முன்வைக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இன்று (ஆக. 12) தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதேபோல், மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் குறித்து பாஜக பெண் உறுப்பினரின் அவமரியாதையான கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அயோத்தி நன்கொடை முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
both Houses of Parliament have been adjourned due to the continued uproar by opposition parties.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.