FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன்!

மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

Updated On : 19 நவம்பர் 2024, 1:50 pm IST
நடிகர் சித்திக்.
பகிர்:

மலையாள நடிகர் சித்திக்கிற்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

மலையாள நடிகையொருவா் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கடந்த 2017-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை முன்னதாக வெளியானது.

மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. அதைத்தொடா்ந்து மலையாள திரையுலக நடிகைகள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, கேரள அரசின் மாநில திரைப்பட அகாதெமியின் தலைவா் பதவியில் இருந்து இயக்குநா் ரஞ்சித், மலையாளத் திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நடிகா் சித்திக் ஆகியோா் திடீரென விலகினா்.

நடிகை ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடா்பாக நடிகா் சித்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக சித்திக் மீது கேரள காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, நடிகர் சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். கேரள உயர்நீதிமன்றம் இம்மனுவை தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி கடந்த செப். 30-ல் மனுதாக்கல் செய்தார்.

நடிகர் சித்திக்கின் முன் ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "சம்பவம் நடைபெற்று 8 ஆண்டுகள் ஆன நிலையில் புகார்தாரர் ஹேமா குழுவில் புகார் அளிக்காமல், 2018 ஆம் ஆண்டு முகநூலில் புகார் அளித்துள்ளார், சில நிபந்தனைகளுக்கு உள்படுத்தப்பட்டு, முன் ஜாமீன் அளிக்க விரும்புகிறோம். சித்திக்கின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்து நிபந்தனைகளுடன் சித்திக்கிற்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments