FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிப்பூர்: 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்!

மணிப்பூரில் 6 ராக்கெட் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி...

Updated On : 29 ஜனவரி 2025, 11:38 am IST
பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த ராக்கெட் குண்டுகள் மற்றும் ஆயுதங்கள்.
பகிர்:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் 6 ராக்கெட் குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஹெங்லெப் காவல் நிலையக் கட்டுபாட்டிலுள்ள லோயிலம்கோட் மற்றும் நாலோன் பகுதியில் நேற்று (ஜன.28) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் அதை ஏவக்கூடிய லாஞ்சர் ஒன்று மற்றும் ஒரு நாட்டு மோர்ட்டார் ஆயுதம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இத்துடன், 7.62 மி.மீ குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: ஜார்க்கண்டில் நக்சல் சுட்டுக்கொலை

இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் இன்கோல் கிராமத்தில் பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள கடைகளில் பணம் பறிப்பில் ஈடுபட்ட கே.சி.பி எனும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கியும் அதன் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments