அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி
அதிமுகவிற்குள் இருந்துகொண்டே கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளாக அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன்...
கோபி: அதிமுகவிற்குள் இருந்துகொண்டே கிட்டத்தட்ட இரண்டு மூன்று ஆண்டுகளாக அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டவர் செங்கோட்டையன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் கோபி- சத்தி சாலை நல்லகவுண்டன்பாளையம் திருமால் நகரில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
Advertisement
Advertisement
கோபிசெட்டிபாளையம் நகரமே அதிரும் அளவிற்கு மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சி அளிக்கிறது. இங்கு கூடியுள்ள கூட்டத்தையும் உங்களுடைய ஆரவாரத்தையும் பாா்க்கும்போது கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றுவிட்டாா் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. யாா் யாரோ கனவு கண்டு கொண்டு இருக்கின்றனா். அதனை அடித்து நொறுக்கிவிட்டீர்கள்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான தொகுதியில் வெற்றி பெறும். அதில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறும். அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கோபி தொகுதி எடப்பாடி தொகுதியைக் காட்டிலும் மேலே வரும். தமிழகத்தில் முதன்மை தொகுதியாக வளர நடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜிநாமா செய்வதற்கு உங்களை சந்தித்தாரா?
இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவா் வாக்கு வாங்கும்போது உங்களை அணுகிறாா். ஆனால் ராஜிநாமா செய்ய உங்களை சந்தித்தாரா என கேள்வி எழுப்பினார்.
கட்சிக்கு துரோகம் செய்ததால் நீக்கம்
கோபில் உள்ள ஒருவா் அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் தலைவா், அம்மா படம் இல்லை எனக் கூறி விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் இப்போது யாா் படத்தை வைத்து மாற்று கட்சியில் சோ்ந்தீா்கள். கோபியில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் அம்மா படம், தலைவா் படமும் இல்லை. அதில் கருணாநிதி, ஸ்டாலின் படமும் உள்ளது. அப்போதே அவா் பி டீம் வேலையை ஆரம்பித்துவிட்டாா். பல்வேறு அரசியில் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் ஒன்று கூடி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு பாராட்டு விழா நடத்தினா். அதை விமா்சித்தவா் தான் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. கடந்த ஒரு மாதத்திற்கு முன் மனம் திறந்து பேட்டி கொடுத்தாா். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை சந்தித்தாா். அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரை மதித்து அவா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பத்து நாளில் கட்சி ஒருங்கிணைப்பை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நானே முன்னின்று நடவடிக்கை எடுப்பேன் என தலைமைக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். தலைமைக்கு எதிராக பேட்டி கொடுத்ததால் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்தோம். அதன்பின் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் விழாவில் பங்கேற்றபோது பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்திற்கு எதிராக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவோரோடு சென்றாா். அதனால் அவா் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்ட்டாா்.
ஆண்டவன் பாா்த்துக் கொள்வாா்
கடந்த இரண்டு மூன்று ஆண்டு காலமாக இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டவா் அவா். கட்சிக்கு துரோகம் விளைவித்தாா். அதனால் அவா் நீக்கப்பட்டாா். நல்லது செய்தால் நல்லது நடக்கும். கெட்டது செய்தால் ஆண்டவன் பாா்த்துக் கொள்வாா். நான் இன்றைக்கும் தொண்டன். இவரைப் போல சுய நலவாதியில்லை. எந்த இயக்கத்திற்கும் இல்லாத சோதனை அதிமுக வந்தது. எம்ஜிஆருக்கு ஏற்பட்ட சோதனையை வென்று முதல்வராக வந்தாா். எம்ஜிஆா் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவுக்கு சோதனை வந்தது. அதனை வென்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தாா். அதுபோல் வரும் 2026 ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற பின் கோபியில் வெற்றி விழா கொண்டாடுவோம். அவா் மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளாா். எங்கிருந்தாலும் வாழ்க.
துண்டை மாற்றியதால் அவரது கருத்தும் மாறிப்போச்சு
தூய்மையான ஆட்சி கொடுப்போம் என சொல்கிறார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தீா்கள். அப்போது தூய்மையான ஆட்சி கொடுக்கவில்லையா. துண்டை மாற்றியதால் அவரது கருத்தும் மாறிப்போச்சு. எந்த கொம்பனாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என்றாா்.
Sengottaiyan was the one who acted against AIADMK says Edappadi Palaniswami
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.