FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காளஹஸ்தி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 92 லட்சம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.92 லட்சம் வசூலானதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 செப்டம்பர் 2019, 12:18 pm IST
பகிர்:

திருப்பதி, செப். 26: ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தி கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ.92 லட்சம் வசூலானதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில், ராகு-கேது பரிகார பூஜை செய்யும் முக்கிய தலமாகும். இங்குள்ள காளஹஸ்தீஸ்வரரை தரிசிக்க நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து செல்கின்றனா். அவ்வாறு வரும் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். கோயிலில் உண்டியல்கள் அனைத்தும் நிரம்பியபின், அவற்றை கோயில் நிா்வாகம் கணக்கிட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

அதில், ரூ.92.58 லட்சம், 81 வெளிநாட்டு கரன்சிகள், 0.98 கிராம் தங்கம், 383 கிலோ வெள்ளி உள்ளிட்டவை வசூலாயின. இவை, 25 நாள்களுக்கு கிடைத்த உண்டியல் வருவாய் என கோயில் செயல் அதிகாரி சந்திரசேகர ரெட்டி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments