FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

வங்கதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்

வங்கதேச கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 19 ஆகஸ்ட் 2022, 3:52 pm IST
ஸ்ரீதரன் ஸ்ரீராம்
பகிர்:

வங்கதேச கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீராம், இந்திய அணிக்காக 2000 முதல் 2004 வரை 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த ஆறு வருடங்களாக ஆஸி. அணியில் சுழற்பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். சமீபத்தில் அப்பதவியிலிருந்து அவர் விலகினார். ஆஸி. அணியில் ஸ்ரீராம் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஆடம் ஸாம்பா, அஷ்டன் அகர் ஆகியோர் திறமையான சுழற்பந்துவீச்சாளர்களாகப் புகழ் பெற்றார்கள். மேக்ஸ்வெல், டி20 ஆட்டங்களில் பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதிலும் ஸ்ரீராமின் பங்களிப்பு உண்டு. ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ளார்.

இந்நிலையில் வங்கதேச அணியின் வெள்ளைப் பந்து ஆட்டங்களுக்கான பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி, டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆகிய முக்கியமான போட்டிகளில் வங்கதேச அணியின் பயிற்சியாளராக அவர் செயல்படவுள்ளார். 

Advertisement

Advertisement

டி20 உலகக் கோப்பை வரை ஸ்ரீராமைப் பயிற்சியாளராக நாங்கள் நியமித்துள்ளோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் இத்தகவலை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த  ரஸ்ஸல் டொமினிகோ, வங்கதேச டெஸ்ட் ஆட்டங்களுக்கான பயிற்சியாளராகத் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments