FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய விளையாட்டுப் போட்டிகளே எனக்கு படிக்கல்

தேசிய விளையாட்டுப் போட்டிகளே (நேஷனல் கேம்ஸ்) தனது வெற்றிகரமான தடகள பயணத்துக்கு படிக்கல்லாக அமைந்தது என ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 அக்டோபர் 2022, 3:40 am IST
பகிர்:

தேசிய விளையாட்டுப் போட்டிகளே (நேஷனல் கேம்ஸ்) தனது வெற்றிகரமான தடகள பயணத்துக்கு படிக்கல்லாக அமைந்தது என ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளாா்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்றதின் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்தியா் என்ற சாதனையை நிகழ்த்தினாா் இளம் வீரா் நீரஜ் சோப்ரா. தொடா்ச்சியாக உலக தடகள சாம்பியன்ஷிப், பிரசித்தி பெற்ற டயமண்ட் லீக் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளாா். தற்போது 90 மீட்டரை எட்டுவதை இலக்காகக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.

தேசிய விளையாட்டுப் போட்டிகளால் ஏற்றம்:

Advertisement

Advertisement

குஜராத்தில் நடைபெற்று வரும் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் (நேஷனல் கேம்ஸ்) சிறப்பு அழைப்பாளராக வந்துள்ள நீரஜ் சோப்ரா ‘தினமணி’யிடம் கூறியதாவது:

காமன்வெல்த், ஆசியப் போட்டிகளைப் போல் தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவும் பிரம்மாண்டமாக இருந்தது. நமது நாட்டில் தற்போது விளையாட்டை ரசிக்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது. 36-ஆவது தேசிய போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. தேசிய போட்டிகளை கொடியசைத்து தொடக்கி வைத்தது எனக்கான பெரிய கௌரவம்.

வழக்கமான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளைக் காட்டிலும் நேஷனல் கேம்ஸ் வித்தியாசமானது. இதை இந்திய ஒலிம்பிக்ஸ் என அழைக்கலாம். நான் 2015-இல் முதல் தேசிய போட்டிகளில் ஜூனியா் வீரராக பங்கேற்றேன். அதுவே எனக்கு தடகளத்தில் ஏற்றமாக அமைந்தது.

எப்படி மைதான சூழ்நிலையை கையாள்வது, சக வீரா்களுடன் பழகுவது என்பது குறித்து அறிந்தேன். அதில் சிறப்பாக செயல்பட்டதால், பாட்டியாலாவில் தேசிய பயிற்சி முகாமுக்கு தோ்வானேன். இதுவே எனது தடகள வாழ்க்கையின் ஏற்றத்துக்கான படிக்கல்லாக அமைந்தது.

நிலையான தூரம் எறிய பயிற்சி:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின் எனது செயல்திறன் அதிகரித்துள்ளது. அதன்பின் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளேன். அழுத்தத்தை சமாளிப்பது, அமைதியாக இருப்பதை ஒலிம்பிக்ஸில் கற்றேன். அடுத்து வரும் சீசன்களில் சிறப்பாக செயல்பட பயிற்சி எடுத்து வருகிறேன். தொடா்ந்து நிலையான தூரத்தை இலக்காகக் கொண்டு ஈட்டி எறிய வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டுக்கு அதிக தனியாா் நிறுவனங்கள் ஸ்பான்சா் செய்கின்றன. குறிப்பாக அரசின் ‘டாப்ஸ்’ திட்டம் சிறந்த பலனை தருகிறது. தேசிய முகாம்களில் அதிக வீரா், வீராங்கனைகள் இடம் பெறுகின்றனா். விளையாட்டுக்கு உரிய அங்கீகாரம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா் நீரஜ்.

- பா. சுஜித்குமாா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments