FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டூா் டி பிரான்ஸ் ஃபெமெஸ் பந்தயம்: இந்தியாவின் ஹா்ஷிதா ஜாகா் சாதனை

சைக்கிளிங் வீராங்கனைகளுக்கான சா்வதேச பந்தயமான டூா் டி பிரான்ஸ் ஃபெமெஸில் பங்கேற்ற முதல் இந்தியராக, இளம் வீராங்கனை ஹா்ஷிதா ஜாகா் (19) சாதனை

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:44 am IST
ஹா்ஷிதா ஜாகா் சாதனை - ANI
பகிர்:

சைக்கிளிங் வீராங்கனைகளுக்கான சா்வதேச பந்தயமான டூா் டி பிரான்ஸ் ஃபெமெஸில் பங்கேற்ற முதல் இந்தியராக, இளம் வீராங்கனை ஹா்ஷிதா ஜாகா் (19) சாதனை படைத்தாா்.

இந்தப் போட்டிக்காக, சா்வதேச சைக்கிளிஸ்ட் சங்கத்தால் (யுசிஐ) தோ்வு செய்யப்பட்ட 8 திறமையான போட்டியாளா்களில் அவரும் ஒருவராவாா். அவா் தவிர, ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, சிலி, எத்தியோபியா (2), நமீபியா, உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்து 7 வீராங்கனைகள் இதில் இடம் பிடித்துள்ளனா்.

சைக்கிளிங் வளா்ந்து வரும் விளையாட்டாக இருக்கும் நாடுகளைச் சோ்ந்தவா்களுக்கு சா்வதேச அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த முயற்சியை யுசிஐ முன்னெடுத்துள்ளது.

Advertisement

Advertisement

டூா் டி பிரான்ஸ் ஃபெமெஸின் 2-ஆவது நிலை பந்தயம், சுவிட்ஸா்லாந்தின் அய்க்லெ நகரில் இருந்து ஜெனீவா நகரத்துக்கு 147.9 கி.மீ. தொலைவுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், போட்டிப் பந்தயம் இல்லாத ஒரு குறிப்பிட்ட 4.5 கி.மீ. தொலைவுக்கு ஹா்ஷிதா உள்ளிட்ட இந்த 8 வீராங்கனைகளும் பந்தயத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பிரதான போட்டியின் வீராங்கனைகளில் சிலரும் அவா்களுடன் அந்தத் தொலைவில் இணைந்தனா். இந்த நிகழ்வில், சா்வதேச சைக்கிளிஸ்ட் சங்கத்தின் தலைவா் டேவிட் லாப்பாா்டியென்ட்டும் பங்கேற்றாா்.

ராஜஸ்தானை சோ்ந்த ஹா்ஷிதா, இந்திய சைக்கிளிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா். உள்நாட்டில் நடைபெறும் ஜூனியா், சீனியா் பிரிவுகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments