891 புதிய வீரர்களுடன் முதல்முறையாக 1,248 பேர் பங்கேற்கும் கால்பந்து உலகக் கோப்பை!
ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026க்கான அணிகள் குறித்து...
ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பைக்கான 48 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக 1,248 வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கிறார்கள்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை தொடரும். இதில் மொத்தமாக 104 போட்டிகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உலகக் கோப்பையில் புதியதாக 891 வீரர்களும் கடந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்கள் 357 பேரும் இதில் பங்கேற்கவிருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கில்யெர்மோ ஓச்சோவா தங்களது ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடவிருக்கிறார்கள்.
மூத்த வீரராக ஸ்காட்லாந்தின் கிரெய்க் கார்டன் (43 ஆண்டுகள் 162 நாள்கள்), இளம் வீரராக மெக்சிகோவின் கில்பெர்டோ மோரா (17 ஆண்டுகள் 240 நாள்கள்) பங்கேற்கிறார்கள். 20 வயதுக்கும் குறைவான 22 வீரர்களும் 40 வயதுக்கும் அதிகமான 7 வீரர்கள் விளையாடவிருக்கிறார்கள்.
இந்திய அணி இதுவரை கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வானதில்லை. இந்தப் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப ஜீ5 அனுமதி பெற்றுள்ளது.
போட்டியை நடத்தும் நாடுகள்: கனடா, மெக்சிகோ, அமெரிக்கா.
ஆசியா: ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், ஜோர்டான், தென் கொரியா, கத்தார், சௌதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், இராக்.
ஆப்பிரிக்கா: அல்ஜீரியா, கபோ வெர்டே, காங்கோ, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா.
வட, மத்திய அமெரிக்கா, கரீபியன்: குராசோ, ஹைதி, பனாமா.
தென் அமெரிக்கா: ஆர்ஜென்டீனா, பிரேசில், கொலம்பியா, ஈக்வாடர், பராகுவே, உருகுவே.
ஓசியானியா: நியூசிலாந்து.
ஐரோப்பா: ஆஸ்திரியா, பெல்ஜியம், போஸ்னியா & ஹெர்செகோவினா, குரோஷியா, செக், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்காட்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி.
FIFA World Cup 2026 squads confirmed: 1,248 dreams, 48 teams and a truly global cast of players
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.