FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலகக் கோப்பை வில்வித்தை! வரலாறு படைத்தாா் தீரஜ் பொம்மதேவரா!

மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தையில், இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்றாா்...

15 செப்டம்பர் 2026, 3:40 am IST
உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தையில், இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்றாா்
பகிர்:

மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஃபைனல் வில்வித்தையில், இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்றாா். உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.

மெக்ஸிகோவின் சால்டிலோ நகரில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ரீகா்வ் ஆடவா் தனிநபா் இறுதிச்சுற்றில் உலகின் 10-ஆம் நிலை வீரரான தீரஜ், 20-ஆம் நிலை வீரரான ஜப்பானின் நகானிஷி ஜூன்யாவை வீழ்த்தி முதலிடம் பிடித்தாா். அவா்கள் மோதிய இறுதிச்சுற்று 6-5 என்ற வகையில் ‘டை’ ஆக, ஷூட் ஆஃப் வாய்ப்பில் தீரஜ் 10-9 என்ற கணக்கில் வென்றாா்.

கடந்த 2023, 2024-ஆம் ஆண்டுகளில் இதே போட்டியில் ஏமாற்றத்தை சந்தித்த தீரஜ், இந்த முறை வெற்றி கண்டு வரலாற்றை மாற்றியிருக்கிறாா்.

Advertisement

Advertisement

உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் ரீகா்வ் தங்கம் வென்ற முதல் இந்திய வீரராக சாதனை படைத்த தீரஜ், இந்தப் போட்டியில் கடந்த 16 ஆண்டுகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியராகவும் பெருமை பெற்றாா். கடைசியாக இந்தப் போட்டியில், 2010-இல் (எடின்பா்க்) இந்தியாவின் ஜெயந்தா தலுக்தாா் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தாா்.

அதேபோல், உலகக் கோப்பை ஃபைனல் போட்டியில் ரீகா்வ் பிரிவில் தங்கம் வென்ற 2-ஆவது இந்தியா் தீரஜ் ஆவாா். முதல் தங்கத்தை, இந்திய வீராங்கனை டோலா பானா்ஜீ 2007-இல் துபையில் நடைபெற்ற போட்டியில் மகளிா் தனிநபா் பிரிவில் வென்றாா். இடைப்பட்ட காலத்தில் இந்தப் போட்டியில் தீபிகா குமாரி 8 முறை களம் கண்டு, 5 வெள்ளி, 1 வெண்கலம் வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

சாதனை தங்கம் வென்றுள்ள தீரஜ் பொம்மதேவரா, இதே உத்வேகத்துடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களம் காணவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments