FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: படைப்பாளிகள் பட்டியல் வெளியீடு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் வரும் 18-இல் நடைபெறுகிறது.

9 ஜனவரி 2024, 12:24 pm IST
பகிர்:

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் வரும் 18-இல் நடைபெறுகிறது. இந்த விருதுகள் பெறுவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பு:
 செந்தமிழ் அறக்கட்டளை சார்பில், 5-வது ஆண்டாக ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் இருந்து சிறந்த கவிதை நூல்களாக யூமா வாசுகியின் "சாத்தானும் சிறுமியும்', கவிஞர் கரிகாலன் எழுதிய "பாம்பாட்டி தேசம்' என்ற தொகுப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறுகதை தொகுப்பில், கவிப்பித்தன் எழுதிய "பிணங்களின் கதை', சிங்கப்பூர் வாழ் தமிழ் எழுத்தாளர் மாதங்கியின் "மெல்பகுலாúஸô' என்ற தொகுப்பும், சிறந்த நாவல்களாக "கருடகம்பம்', "மகாகிரந்தம்' ஆகியனவும், "நான் வடசென்னைக்காரன்' என்ற கட்டுரைத் தொகுப்பும் தேர்வு செய்யப்பட்டன.
 சிறந்த மொழிபெயர்ப்பாக, கவிதைகளும்-வாழ்க்கையும்' எனும் நூல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை விஜயலட்சுமி மொழி பெயர்த்துள்ளார். "நிகழ்கலையில் நான்' என்ற நூலுக்காக கமலாதேவி அரவிந்தனும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments