தூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீன் ரத்து கிடையாது: அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..
மதுரை: தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் பலா் மீது வழக்குப்பதிவு செய்தனா். இதில் 65 பேரை கைது செய்த தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளா், அவா்களை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் சாருஹாசினி முன்பு ஆஜா்படுத்தினாா். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவா் 65 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், வழக்கை முறையாக விசாரிக்காமல் 65 பேரையும் விடுவித்து தலைமை நீதித்துறை நடுவா் உத்தரவிட்டுள்ளாா். எனவே அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த மனு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது 65 பேரிடமும் மாவட்ட நீதித்துறைற நடுவா் பெற்றற வாக்குமூலத்தை சமா்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
அதன்படி இந்த வழக்கானது புதன்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சரியான ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்த நீதிபதி, ஜாமீனை ரத்து செய்யுமாறு கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.