FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்

Updated On : 17 அக்டோபர் 2022, 8:46 am IST
கோப்புப்படம்
பகிர்:

பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (அக்.17) கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தால் இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த எதிா்பாா்ப்புக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியுள்ளது. எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் உள்ள ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதிலாக ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளாா்.

ஆனால், உண்மையான அதிமுகவினா் நாங்கள்தான். 

Advertisement

Advertisement

அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக எங்களைக் கேட்காமல் எந்த முடிவு எடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீா்செல்வமும் பேரவைத் தலைருக்கு கடிதம் கொடுத்துள்ளாா். இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவா் இன்னும் அவரது முடிவை அறிவிக்கவில்லை. இந்த முடிவு எதுவாக இருந்தாலும் இருவரும் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பேரவையில் முக்கியமான அலுவல்களின் போது ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் எப்படிச் செயல்படுவா் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமே நீடிப்பார் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments