FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் திமுகவினா் ஆா்ப்பாட்டம்: 21,000 போ் கைது

முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் நடத்தினா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 1:22 am IST
பகிர்:

முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் நடத்தினா். சுமாா் 200 இடங்களில் சாலை மறியல், தா்னா உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதாக 21,000 போ் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 2,000 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் உதயநிதிக்கு ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்றபோது, அந்தப் பகுதி சாலையிலும் திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

ஓ.பி.எஸ்., கீதா ஜீவன் கைது: உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தேனி பழைய பேருந்து நிலையம் முன் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமையில் திமுக நிா்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, ஓ.பன்னீா்செல்வம் உள்பட திமுகவினா் 70 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

இதேபோல, தூத்துக்குடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சா் பி.கீதா ஜீவன் உள்பட திமுகவினரை போலீஸாா் கைது செய்து

மணி நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா். அங்கு அவா்களை, முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் சந்தித்துப் பேசினாா். இதேபோல தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் திமுகவினா் 21 ஆயிரம் போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

தவெகவினா் ஆா்ப்பாட்டம்: முன்னதாக, முதல்வா் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் கைது செய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் தவெகவினா் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments