திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்கலாம்; ஆனால் வரலாற்றை மாற்றி எழுத முடியாது! கனிமொழி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளில் திமுக எம்பி கனிமொழி பதிவு...
திட்டங்களிலிருந்து கருணாநிதியின் பெயரை நீக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது என திமுக எம்.பி. கனிமொழி பதிவிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் கனிமொழியும் கலந்துகொண்டார்.
Advertisement
Advertisement
இதன்பின்னர் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,
"திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, 'இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்' என்று எழுதப்பட்டிருக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.
DMK MP Kanimozhi posts on the death anniversary of former Chief Minister Karunanidhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.