காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாலையில் உயர்ந்திருப்பது பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதன்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.1,440 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,280 அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதேசமயம் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
Advertisement
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது.
In Chennai, the price of jewelry gold saw a sharp rise in the evening
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.