தற்கொலை சம்பவம்: அதிமுக நிர்வாகி உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி!
அதிமுக நிர்வாகி உடலுக்கு இபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தியது குறித்து...
தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரன் உடலுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் அதிமுக நிர்வாகி மகேந்திரன், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
Advertisement
Advertisement
”உங்கள் குடும்பத்தை அதிமுக கட்சி பார்த்துக் கொள்ளும், கவலைப்படாதீர்கள்” என்று மகேந்திரன் குடும்பத்தினருக்கு இபிஎஸ் ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு இபிஎஸ் அளித்த பேட்டியில், ”மகேந்திரன் குழந்தையின் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரையிலான கல்விச் செலவு முழுவதையும் அதிமுக ஏற்கும்.
அவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ. 30 லட்சம் இழப்பீடும், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதுபோன்று அதிமுக தொண்டர்கள் செய்யக் கூடாது என பாதம் கணிந்து கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami personally paid homage to the mortal remains of Mahendran, an AIADMK functionary who committed suicide.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.