தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு!
தங்கம் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்திருப்பது பற்றி....
தங்கம் விலை காலையில் குறைந்திருந்த நிலையில் மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒருகிராம் ரூ.14,155க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ஒருகிராம் ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனையாகிறது.
Advertisement
Advertisement
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சரவனுக்கு 1,920 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறி இறங்கி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
While gold prices dropped in the morning, they surged sharply in the evening.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.