இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது தொடர்பாக...
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமத்துவப் போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசுவிழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.
Advertisement
Advertisement
நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க! என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Long live the great renown of Immanuel Sekaranar! – DMK President M.K. Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.