FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நடிகை த்ரிஷா எங்கேயிருக்கிறார்? ராதிகா வெளியிட்ட செல்ஃபி வைரல்!

நடிகை த்ரிஷா எங்கேயிருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்த நிலையில் ராதிகா போட்ட பதிவு வைரலானது.

12 செப்டம்பர் 2026, 1:46 pm IST
பகிர்:

நடிகை ராதிகா சரத்குமார், திடீரென லண்டன் சென்றுள்ளார். அப்போது அவர் நடிகரும், கார் பந்தய வீரருமான அஜீத்குமார் பங்கேற்கும் சில்வர்ஸ்டோர் கார் பந்தயம் நடைபெறும் இடத்துக்கு நேரில் சென்று, ஆச்சரியம் கொடுத்தார்.

லண்டனில் நடைபெறும் மிச்செலின் லே மான்ஸ் கோப்பைச் சுற்றுப் போட்டியில் அஜீத் குமார் பங்கேற்கவிருக்கிறார். அங்கு பயிற்சியில் இருந்த அவரை, நடிகை ராதிகா சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட விடியோக்களையும் ராதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிக லைக்குகளை பெற்றுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியிருக்கிறது.

Advertisement

Advertisement

நடிகர் அஜித்துடனான சந்திப்பை பகிர்ந்த ராதிகா சரத்குமார், அசைக்க முடியாத ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் இலட்சியத்துடன் செயல்பட்டு சாதனையாளராகத் திகழும் அதே வேளையில், எப்போதும் போல அடக்கமாகவும் வசீகரமாகவும் இருக்கும் அஜித்தைப் பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அவர் ஒரு சிறந்த உத்வேகம் என்று விடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோவைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் பலரும் அதனை பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு இணையாக அடுத்த செல்ஃபியும் வைரல்.

ராதிகா வித் நடிகை செல்ஃபி!

அது மட்டுமல்ல, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மற்றுமொரு செல்ஃபி புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார். அந்த செல்ஃபியில் ராதிகாவுடன் இருப்பது நடிகை த்ரிஷா.

நடிகை த்ரிஷா, மலையாளத் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் நிலையில், தற்பாது அங்குச் சென்றிருக்கும் நடிகை ராதிகா அவரையும் சந்தித்துள்ளார்.

தமிழ் நடிகைகள் இருவர், லண்டனில் சந்தித்துக் கொண்டதன் அடையாளமான செல்ஃவியை, இரண்டு நடிகைகளின் ரசிகர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், தொழில் முதலீட்டை ஈர்க்க லண்டன் சென்றிருக்கிறார். அஜித் குமாரும் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்துக்காக லணடனில் இருக்கிறார். இந்த கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடக்கி வைக்கவும் இருக்கிறார்.

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நேற்று லண்டன் விமான நிலையத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வந்திறங்கினார். இன்று ராதிகாவும் லண்டன் சென்றுள்ளார். ஏற்கனவே படப்பிடிப்புக்காக நடிகை த்ரிஷா லண்டனில்தான் இருக்கிறார்.

எனவே, தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் லண்டனில் இருப்பதால் அங்கிருந்து வரும் செல்ஃபிகளையும் விடியோக்களையும் அவர்களது ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இதற்கிடையே, நடிகை த்ரிஷா லண்டனில்தான் இருக்கிறாரா? சென்னை வந்துவிட்டாரா? என்ற அவரது ரசிகர்களின் கேள்விக்கும் விடை கிடைத்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments