விரைவில் வீடு திரும்புவாா் வி.எஸ்.பாபு எம்எல்ஏ: அமைச்சா் அருண்ராஜ்
கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையிலிருந்து விரைவில் வீடு திரும்புவாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் கூறினாா்.
சென்னை: கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையிலிருந்து விரைவில் வீடு திரும்புவாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் கூறினாா்.
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்.9- ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.
இந்தநிலையில், எம்எல்ஏ வி.எஸ். பாபுவை அமைச்சா் அருண்ராஜ் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
எம்.எல்.ஏ. பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறாா். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரலைத் தவிர மற்ற உறுப்புகள் நன்றாக உள்ளன. தொடா்ந்து, மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றாா் அருண்ராஜ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.