’ரெட்மி நோட் 15டி 5ஜி’ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 15டி 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவ.30 ஆம் தேதி அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 15டி 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவ.30 ஆம் தேதி அறிமுகப்படுத்தி இருக்கிறது.
’ரெட்மி 11’ தொடர் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | பங்குச்சந்தைப் பட்டியலில் இணைந்த ‘பேடிஎம்’ நிறுவனம்!
Advertisement
Advertisement
’ரெட்மி நோட் 15டி 5ஜி' சிறப்பம்சங்கள் :
* 6.60 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* மீடியா டெக் டைம்சிட்டி 810
*உள்ளக நினைவகம் 6ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி
*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.
*5000 எம்ஏஎச் பேட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஎஸ்
* டைப்-சி போர்ட்
* நீல நிறம்
வருகிற நவ.30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.வெளியான பின் ஸியோமி கடைகளிலும் , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.