இனி புகைப்படங்களை விடியோவாக மாற்றலாம்! அறிமுகமானது கூகுள் வியோ 3.1 லைட்!
தரவுகளை உள்ளிடுவதன் மூலம் புகைப்படங்களை விடியோவாக மாற்றும் புதிய கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறித்து...
விருப்பப்பட்ட தரவுகளை உள்ளிடுவதன் மூலம் புகைப்படங்களை விடியோவாக மாற்றும் வியோ 3.1 லைட் என்ற புதிய கருவியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு முன்பு உள்ள வியோ 3.1 ஃபாஸ்ட் கருவியை விட குறைந்த விலையில் நிறைவான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது வியோ 3.1 லைட்.
எனினும், தரத்தில் எந்தவகையிலும் குறைவில்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தனியார் அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களின் பெரிய அளவிலான பயன்பாடுகளுக்கு கூகுள் வியோ 3.1 லைட் ஏற்றதாக இருக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.
ஜெமினி ஏபிஐ மற்றும் கூகுள் ஏஐ ஸ்டூடியோ ஆகியவற்றில் சிறப்புக் கட்டணத்தை செலுத்துவதன் மூலம் வியோ 3.1 லைட் கருவியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
வியோ 3.1 லைட் கருவியின் விலையானது விடியோவின் நீளம் மற்றும் உள்ளீட்டுத் தீர்வின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களைப் பதிவிட்டு வேண்டிய தேவைகளை உள்ளீடு செய்வதன் மூலம் 4, 6, 8 விநாடிகளுக்கான விடியோவை உருவாக்க முடியும்.
720p திறனுடைய விடியோவை உருவாக்கினால் ஒரு விநாடிக்கு 0.05 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1080p திறனுடைய விடியோவுக்கு விநாடிக்கு 0.08 டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட விடியோ ஃபார்மட்களுக்கு பொருந்தும் வகையில் வியோ 3.1 லைட் உருவாக்கப்பட்டுள்ளது. இதோடு, லேண்ட்ஸ்கேப் - 16:9, போர்ட்ரெய்ட் - 9:16 விடியோக்களையும் உருவாக்கலாம்.
தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அல்லது தேவையான விநாடிகளுக்கு விடியோவை நீட்டித்துக்கொள்ளலாம். அதற்கேற்ப தரவுகளைக் டெக்ஸ் மூலம் உள்ளீடு செய்தால் போதும்.
வியோ 3.1 லைட் அறிமுகம் செய்வதோடு மட்டுமின்றி, வியோ 3.1 ஃபாஸ்ட் கருவியின் பயன்பாட்டுக் கட்டணத்தை குறைக்கவும் கூகுள் முடிவு செய்துள்ளது.
Google Veo 3.1 Lite launched: How to create videos using text and images with this new AI model
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.