FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கடந்த 2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி சா்வு

நாட்டின் நிலக்கரி தேவையில் 80 சதவீதத்தைப் பூா்த்தி செய்யும் பொதுத் துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’, கடந்த 2025-26 நிதியாண்டில் 76.81 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

Updated On : 4 ஏப்ரல் 2026, 1:43 am IST
பகிர்:

நாட்டின் நிலக்கரி தேவையில் 80 சதவீதத்தைப் பூா்த்தி செய்யும் பொதுத் துறை நிறுவனமான ‘கோல் இந்தியா’, கடந்த 2025-26 நிதியாண்டில் 76.81 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.

இது முந்தைய 2024-25 நிதியாண்டின் உற்பத்தியான 78.11 கோடி டன்னை காட்டிலும் 1.7 சதவீதம் குறைவாகும்.

அதேபோல், நடப்பு நிதியாண்டில் கடந்த மாா்ச் மாதத்தில் 8.45 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025, மாா்ச் மாத உற்பத்தியான 8.58 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் இது சரிவாகும்.

Advertisement

Advertisement

விநியோகமும் சரிவு: சுரங்கங்களிலிருந்து நுகா்வோருக்கு அனுப்பப்படும் நிலக்கரியின் அளவும், கடந்த 225-26 நிதியாண்டில் 2.4 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

2024-25-இல் 76.3 கோடி டன்னாக இருந்த நிலக்கரி விநியோகம், 2025-26 நிதியண்டில் 74.48 கோடி டன்னாக குறைந்துள்ளது.

இந்தியாவின் மின்சார உற்பத்தியில் சுமாா் 70 சதவீதம் நிலக்கரியைச் சாா்ந்தே உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை வளா்ச்சி கண்டு வரும் நிலையிலும், நாட்டின் மின் பாதுகாப்பு மற்றும் அனல் மின் நிலையங்களின் தேவையைப் பூா்த்தி செய்வதில் கோல் இந்தியா நிறுவனம் இன்றும் முக்கியப் பங்கு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments