பூரண கொழுக்கட்டை
வெல்லத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தேவையான பொருள்கள்:
துருவிய தேங்காய் , அரிசி மாவு -தலா 1 கிண்ணம்
வெல்லம் - முக்கால் கிண்ணம்
Advertisement
Advertisement
ஏலக்காய்ப் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு -ஒரு சிட்டிகை
செய்முறை:
வெல்லத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீரில் ஊற்றி கொதிக்க வைக்கவும். வெல்லம் சுருங்கும்போது, அதில் தேங்காய்த் துருவல் சேர்க்கவும். நெய், ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்கு கிளறி ஒரு உருண்டை போல வரும் வரை சமைக்கவும்.
அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணம் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் ஒரு சிட்டிகை உப்பும், நெய்யும் சேர்க்கவும். கொதிக்கும் தண்ணீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டிகள் இல்லாத அளவுக்கு அரிசி மாவை சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து, கை மூலம் உருண்டையாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.
வாழை இலையில் அரிசி மாவு உருண்டையை வைத்து வட்டமாக தட்டிக் கொள்ளவும். தட்டியவுடன் தேங்காய்ப் பூரணத்தை மாவு மாவுக்குள் வைத்து கொழுக்கட்டை வடிவமாக உருவாக்கவும். இட்லிச் சட்டியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.