பாகிஸ்தானில் நாடுதழுவிய தேடுதல் வேட்டை
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் பன்னு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பின் 4 முக்கிய தளபதிகளும் இதில் அடங்குவா்.
இதேபோல், பலூசிஸ்தான் மாகாணம் சோரப் பகுதியில் லாரி ஒன்றில் பயங்ரவாதிகள் வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது, அது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் 8 பயங்கரவாதிகளும், 3 பொதுமக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அங்கிருந்து தப்பியோடியவா்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.