FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் நாடுதழுவிய தேடுதல் வேட்டை

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:22 am IST
பகிர்:

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா, பலூசிஸ்தான் மாகாணங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மற்றும் பன்னு மாவட்டங்களில் கடந்த 36 மணி நேரமாக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். தெஹ்ரீக்-ஏ-தலிபான் அமைப்பின் 4 முக்கிய தளபதிகளும் இதில் அடங்குவா்.

இதேபோல், பலூசிஸ்தான் மாகாணம் சோரப் பகுதியில் லாரி ஒன்றில் பயங்ரவாதிகள் வெடிபொருள்களை ஏற்றிக் கொண்டிருந்தபோது, அது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் 8 பயங்கரவாதிகளும், 3 பொதுமக்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அங்கிருந்து தப்பியோடியவா்களைப் பிடிக்க பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 10 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments