FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

உக்ரைன் தலைநகரில் ரஷியா குண்டுமழை

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் வியாழக்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 5:53 am IST
பகிர்:

உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் வியாழக்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய தாக்குதலில் 16 போ் உயிரிழந்தனா்; சுமாா் 40 போ் காயமடைந்தனா்.

உக்ரைன் முழுவதும் 28 இடங்களில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. கீவ் நகரில் மட்டும் 12 இடங்களில் ரஷியாவின் ஏவுகணைகள் தாக்கின. இதில் 30 குடியிருப்புகள், ஒரு பள்ளி, குழந்தைகள் மருத்துவமனை ஆகியவை சேதமடைந்தன. சோலோமியான்ஸ்கி பகுதியில் 9 மாடி குடியிருப்பு கட்டடத்தின் மேல் இரு தளங்கள் முற்றிலும் இடிந்து விழுந்து தீப்பற்றியது.

பல மணி நேரம் நீடித்த இந்த வான்வழித் தாக்குதலால் 2,000 குழந்தைகள் உள்பட 38,000-க்கும் மேற்பட்ட மக்கள் கீவ் நகர சுரங்கப்பாதை ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்தனா்.

Advertisement

Advertisement

பொதுமக்கள் உள்கட்டமைப்புகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ரஷியா பலவகை ‘பாலிஸ்டிக்’ மற்றும் ‘க்ரூஸ்’ ஏவுகணைகள், ட்ரோன்களை ஒருங்கிணைத்து இத்தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் கூறியுள்ளது. ஆனால், உக்ரைனின் ராணுவத் தளவாட இலக்குகளையே குறிவைத்து தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தயாரிப்பான ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளுக்கு உக்ரைனிடம் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷியா கடந்த சில நாள்களாக தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைனைப் பாதுகாக்க கூடுதல் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை வழங்குமாறு அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி சா்வதேச நாடுகளுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments