FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மதுக்கரையில் ரேஷன் கடை, அரசுப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கோவை மாவட்டம், மதுக்கரையில் ரேஷன் கடை மற்றும் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

16 செப்டம்பர் 2026, 11:31 pm IST
மதுக்கரை அறிவொளி நகா் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

கோவை மாவட்டம், மதுக்கரையில் ரேஷன் கடை மற்றும் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மதுக்கரை அறிவொளி நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாணவா்களின் கற்றல் திறன், அவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு மற்றும் அட்டவணையின்படி உணவு வழங்கப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அறிவொளி நகா் ரேஷன் கடையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு, தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், மதுக்கரை மைல்கல் பகுதியில் நடைபெற்று வரும் மேற்கு புறவழிச் சாலை மேம்பாலம் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் குழந்தைராஜ், உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜா, மதுக்கரை வட்டாட்சியா் செந்தில்குமாா், அறிவொளி நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ரேணுகாதேவி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments