‘தளபதி 67’ எல்சியூ உறுதி: விக்ரம் பட நடிகர் சுவாரசிய தகவல்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் பற்றி பகத் பாசில் கூறியது வைரலாகி வருகிறது.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தினை இயக்குகிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்தப்படத்தில் நடிப்பதாகவும் இதுதான் விஜய்யின் முதல் பான் இந்தியப் படமாக வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: 11 நாளில் ரூ.250 கோடி வசூலான ‘வாரிசு’ திரைப்படம்!
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இயக்குநர் மிஷ்கின் விஜய்யுடன் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஃபகத் கேரளாவில் தங்கம் படப்புரமோஷனில் பங்கேற்றபோது தளபதி 67இல் நீங்கள் நடிக்க போகிறீர்களா எனக் கேட்டதற்கு, “தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருவதால் நான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு எல்லாவற்றையும் சொல்ல முடியாது. முறையான அறிவிப்புகளை படக்குழு அறிவிக்கும். இப்போது இங்கு வந்திருக்கும் படத்தினைப் பற்றி பேசுவோம்” எனக் கூறியுள்ளார்.
இதனால் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் எனப்படும் எல்சியூ உறுதியாகி உள்ளதாக இணையத்தில் இந்த விடியோ வைரலாகி வருகிறது.
Related Article
‘பரிதாபங்கள்’ கோபி-சுதாகர் இணையும் திரைப்படம் பற்றி அறிவிப்பு!
‘ஒரு பொண்ணுக்காக இல்லைனா எதுக்காக உயிர் வாழனும்?’ - வெளியானது மைக்கேல் டிரைலர்!
'எங்களது கனவுக்கு உயிர் கொடுத்துள்ளோம்' - நடிகை பிரியா பவானி ஷங்கர் நெகிழ்ச்சி!
‘இலட்சிய படக்குழு; லவ் யூ தளபதி’- வாரிசு பாடலாசிரியர் விவேக் ட்வீட்!
மீண்டும் நகைச்சுவை நடிகராகும் சந்தானம்!
‘8 வருஷமாக அஜித்தை சந்திக்க முயன்று சோர்வடைந்து விட்டேன்’- இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் வேதனை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.