தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி நடைபெற்ற அவா்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி நடைபெற்ற அவா்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நடிகா் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வா்யாவை கடந்த 2004-இல் நடிகா் தனுஷ் காதலித்து மணந்தாா். இவா்களுக்கு, இரு மகன்கள் உள்ளனா். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வா்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022-இல் அறிவித்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேரில் ஆஜராக மூன்று முறை உத்தரவிட்டும் இருவரும் ஆஜராகவில்லை.
இந்த வழக்கு, கடந்த நவ. 21-ஆம் தேதி நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வா்யா ஆகியோா் ஆஜராகினா். அவா்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினாா். பின், இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீா்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என கேட்டாா்.
அதற்கு இருவரும், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்தனா். மேலும், நீதிமன்ற ஆவணங்கள், பதிவேட்டில் கையொப்பமிட்டனா். இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் நவ. 27-இல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தாா்.
அதன்படி இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ.18-ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்வதாகவும் நீதிபதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதையும் படிக்க | 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.