FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஞ்சாப் எல்லையில் ஹெராயின், மற்றுமொரு பாகிஸ்தான் ட்ரோன் பறிமுதல்!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன், 5 கிலோ ஹெராயின் மற்றும் ஒரு துப்பாக்கியை பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுளனர். 

Updated On : 26 நவம்பர் 2023, 12:10 pm IST
பகிர்:

பஞ்சாப் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மற்றுமொரு பாகிஸ்தான் ட்ரோன் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்கள் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், நவ.26 அதிகாலையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமிர்தசரசில் உள்ள சக் அல்லா பக்ஷ் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பாகிஸ்தான் ட்ரோன், ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கியுடன், மொத்தம் 20 குண்டுகளைக் கொண்ட 2 மேகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  

இதையும் படிக்க : யானை தாக்கி விவசாயி பலி!

Advertisement

Advertisement

மேலும் கடந்த 10 மாதத்தில் மட்டும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த 69 பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் பெரும்பான்மை ட்ரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments