இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
டீ குடிப்பதை நிறுத்தினால் லட்சாதிபதியாகலாம்! எஸ்பிஐ-யின் புதிய திட்டம்!
டீ குடிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு ஆகும் செலவை, தொடர் வைப்புத் திட்டத்தில் செலுத்தி, ஒவ்வொருவரும் லட்சாதிபதியாகலாம் என்று நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
கிராம நத்தம் பட்டா சிறப்புத் திட்டம், நில வரி முறை ரத்து! செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் நத்தம் நிலப்பரப்பில் பிரச்னையில்லா இடங்களில் வாழும் அனைவருக்கும் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டம் முதல்வர் விஜய் தலைமையில் செயல்படுத்தப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
முதல்வர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அவைத் தலைவர் சொன்னது என்ன?
தமிழக பேரவைக்குள், முதல்வர் ஜோசப் விஜய் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் ரமேஷ் வைத்த குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடைபெற்றது. பின்னர், அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இது குறித்து விளக்கம் அளித்தார்.
Advertisement
Advertisement
அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!
வனத்துறை அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரினார் முதல்வர் விஜய்.
ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்பு
ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!
எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்!
பிகார் சட்டப்பேரவையில் பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏவாக பிரசாந்த் கிஷோர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது மகன் எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2020-க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் இல்லை! திமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்! ஆதவ் அர்ஜுனா
2020க்கு முன் போதைப்பொருள் கலாசாரம் தமிழகத்தில் இல்லை என்றும் போதைப்பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுகதான் என்றும் பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்
கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது கடும் நடவடிக்கை தேவை என பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
மேற்கு வங்கத்தில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து
விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.