இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்
தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது
வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளது.
9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்!
2024 - ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பில் 9 விருதுகளை தமிழ்த் திரைப்படங்கள் வென்றுள்ளன.
Advertisement
Advertisement
அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு!
கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி
அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1,04,102 ஆக உயர்ந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பழனி கோயில் நில மோசடி: சிபிசிஐடி தீவிர சோதனை!
பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஆகியோரது வீடுகளில் சிபிசிஐடி போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
21 நாள்கள் தொடர் உண்ணாவிரதம்! வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விக்ரம் 1 விண்ணில் செலுத்துவது தாமதம்
தொழில்நுட்பக் கோளாறால் விக்ரம் -1 ராக்கெட் விண்ணில் செலுத்துவது தாமதமாகியிருக்கிறது. விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை, வீராணம் ஆகிய 6 ஏரிகளில் தற்போது 45.44 சதவீத நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.
முதல்வரின் எச்சரித்தப் பிறகும்! கால்நடைத் துறை அமைச்சரின் ஆய்வு ரீல்ஸ் வைரல்! பாடல்தான் ஹைலைட்!
கோவை: கோவை சூலூரில் அதிகாரிகளுக்கு தெரியாமல் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் கமலி திடீர் ஆய்வு நடத்தியதோடு, முதல்வர் ஜோசப் விஜய்யின் எச்சரிக்கையையும் மீறி ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.
விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
பிளாஸ்டிக் போன்றதொரு, பாலிமர் ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்கும் முயற்சியை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது. அதற்கான மூலப்பொருளை (சப்ஸ்ட்ரேட்) வழங்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை இந்திய ரிசர்வ் வங்கி கோரியுள்ளது.
தமிழ்நாடு நாள்! முதல்வர் விஜய் வாழ்த்து
தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வர் விஜய் "தமிழின் இனிமையும், தமிழரின் உயரியபண்பாடும், மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும். தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.