மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்!
தில்லியில் சிஜேபி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது கரப்பான் கட்சி..
தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
நீட் முறைகேடு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, கரப்பான் கட்சித் தலைவர் அபிஜீத் போராட்டத்தைக் கைவிட மாட்டோம், தான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் மத்திய அரசு ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மத்திய அரசுடன் சிஜேபி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைக்கு பாஜக அரசு உடன்பட்டுள்ளது. இதையடுத்து சிஜேப கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.