வடகிழக்கு இந்தியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவு
வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது பற்றி....
வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பூடானில் உள்ள கெல்போஷிங் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவிலும், 5 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
இதன் அதிர்வுகள் அஸ்ஸாமின் குவாஹாட்டி உட்பட பிராந்தியத்தின் பிற இடங்களிலும் உணரப்பட்டன.
மாலை 4.01 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதுவரை பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாமின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்களிடையே பீதி நிலவியது.
An earthquake of magnitude 4.9 struck the Bhutan-Assam region on Saturday afternoon, according to the National Center for Seismology (NCS).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.