FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

அதிகாரத்தின் கரங்களில் ஒரு பெண் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்? நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்: லீனா மணிமேகலை

மானநஷ்ட வழக்கு என்பது என்ன? பாசிஸ சக்திகளின் பயன்பாட்டுக்காக இந்த நாடு உருவாக்கி வைத்த ஒரு சட்டம் அது! அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகார பலம் மிக்கவர்களே! : லீனா மணிமேகலை

Updated On : 31 அக்டோபர் 2018, 1:52 pm IST
பகிர்:

மானநஷ்ட வழக்கு என்பது என்ன? பாசிஸ சக்திகளின் பயன்பாட்டுக்காக இந்த நாடு உருவாக்கி வைத்த ஒரு சட்டம் அது! அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதிகார பலம் மிக்கவர்களே! : லீனா மணிமேகலை

ஒரு பெண்... ஒரு பிரபலத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார்... அது உண்மையானதா? பொய்யானதா? என்பது இன்னமும் நிரூபணம் ஆகவில்லை. நடுவில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக சிலரும், குற்றம்சாட்டப்பட்ட பிரபலத்தின் சார்பாக சிலரும் நின்று கொண்டு அந்தக் குற்றத்திற்காக வாதிட்டுக் கொள்கிறார்கள். எனில் அந்த வாதம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும்?  நடுவில் எந்தப் பக்கமும் சார்பெடுக்காமல் தனக்குத் தெரிந்த ரகசியங்களைப் பகிர மேடை கிடைத்தாற் போல ஒரு இசையமைப்பாளரின் தாயார் வந்து பிரபலமானவர் குறித்து ‘இட்ஸ் அ ஓபன் சீக்ரெட்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போல உண்மையைப் போட்டு உடைக்கிறார். அந்தப் பிரபலத்தைப் பற்றி இப்படியொரு கருத்தை தெரிவிக்க வேண்டுமென்று அவருக்கு எந்த நிர்பந்தமும் இருக்க வாய்ப்பே இல்லையே! அப்படியென்றால் அதிகார துஷ்பிரயோகம் நடத்தப்பட்டிருக்க ஏராளமான வாய்ப்புகள் இருந்திருக்கிறது என்பது உண்மையென்றாகிறது தானே? வேடிக்கை என்னவென்றால் அப்படியான நபர்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் வெட்கக் கேடு! அப்படியான சமூகத்தில் நம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை பொது வெளியில் வைப்பது என்பது இனியொரு பெண்ணிடம் அப்படியான அத்துமீறல் நடத்தப்பட்டு விடக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுக்காகவும், தனக்கு நேர்ந்த மன உளைச்சல் மற்றுமொரு பெண்ணுக்கு நிகழ்ந்து விடக்கூடாது எனும் அச்ச உணர்வைக் கடக்க கிடைத்த வாய்ப்பாக மட்டுமேயாக இருக்க முடியுமே தவிர இதற்கப்பால் வேறு எந்த நோக்கத்தையும் கற்பிக்க நினைப்பது மேலும் மேலும் பெண்களை அவர்களுடைய துன்பத்திலிருந்து வெளிவர முடியாமல் அதல பாதாளத்தில் வைத்து அமுக்குவதாக மட்டுமே இருக்க முடியும்.

- லீனாவுடனான நேர்காணலின் பின் இப்படி ஒரு முடிவுக்கு மட்டுமே வரமுடிகிறது.

Advertisement

Advertisement

நேர்காணலுக்கான முன்னோட்டம் இதோ...

முழுமையான நேர்காணலைக் காண வெள்ளி வரை காத்திருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments