நவீனமயமாகும் பல்லாவரம், ஆவடி உழவர் சந்தைகள்! வேளாண் பட்ஜெட்
பல்லாவரம், ஆவடி உழவர் சந்தைகள் நவீனமயமாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு.
சென்னையில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற பல்லாவரம் மற்றும் ஆவடி உழவர் சந்தைகளை நவீனமயமாக்க வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் வினோத் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதில், உழவர் சந்தைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
சென்னையில் பல்லாவரம், ஆவடியில் உள்ள உழவர் சந்தைகள் ரூ.20 கோடி செலவில் நவீனமயமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 50 உழவர் சந்தைகளில் ரூ.2 கோடியில் மின்னணு விலைப் பலகைகள் அமைக்கப்படும்.
க்யூஆர் கோடுடன் விதைகள் சான்றிதழ் வழங்க ரூ.
என்ற அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Pallavaram Avadi uzhavar Markets Modernization Agriculture Budget
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.