எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்பதே மக்கள் எதிர்பார்ப்பு: அமைச்சர் அருண்ராஜ்
முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதத் துரதிருஷ்டவசமானது என அமைச்சர் அருண்ராஜ் கூறியது பற்றி...
முதல்வரின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதத் துரதிருஷ்டவசமானது என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது, "தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து கடந்தாண்டில் திமுகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. அதில் தவெகவும் பங்கேற்று, திமுகவை ஆதரித்தது. மக்கள் இப்போதும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
இன்றைய கூட்டத்தைப் புறக்கணிக்க திமுக திட்டமிட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. தொகுதி மறுவரையறை மட்டுமின்றி, மேக்கேதாட்டு, காவிரி விவகாரம் என அனைத்து விவகாரங்களிலும் நாங்கள் (தவெக) உறுதியாக நிற்கிறோம்.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டின் நலனுக்குத் தேவையானவற்றைச் செயல்படுத்துமாறு மத்திய அரசிடம் கோருவோம்" என்று தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடத்த முதல்வர் இன்று அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், முதல்வர் விஜய் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக எம்.பி.க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்து விட்டனர்.
People expect the DMK to participate in the MPs' meeting, says Minister Arunraaj
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.