இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 8- நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
சென்னை, 20 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இரவு 10 மணிவரை சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அம்த் ஷா சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி
மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் என திமுக எம்.பி. கனிமொழி சனிக்கிழமை (ஆக. 8) தெரிவித்தார்.
Advertisement
Advertisement
முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி! தமிழ்நாடு முழுவதும் ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடி கோரியும், மேக்கேதாட்டு விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் இருப்பதாகவும் தவெக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆக. 14-ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
திமுக, அதிமுக பங்கேற்கவில்லை; ஆனால், இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்
தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள் என விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சனிக்கிழமை (ஆக. 8) தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதி
முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!
நாட்டில் முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனமான ஃபார்சூன் நிறுவனத்துக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கடுப்பாட்டு ஆணையம் அபராதம் விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டென மாறிய வானிலை! சென்னையில் மழை
சென்னையில் காலை முதலே சூரியன் தலைக்காட்ட விரும்பாமல் சற்று ஒதுங்கியே காணப்பட்ட நிலையில், பிற்பகல் 3 மணிக்கு ஆங்காங்கே மழை தலைக்காட்டத் தொடங்கியிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் பரவும் குவிஸ் லிங்குகள்! கிளிக் செய்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
மால்வேர், சைபர் மோசடிகள் என செல்போன் மூலமாக தகவல்களை அல்லது பணத்தைத் திருடும் கும்பல்களின் கைவரிசை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது.
ரயிலில் சூட்கேஸில் சடலம்: கொலையாளிகளை காட்டிக் கொடுத்த சென்னை துணிக்கடைப் பை!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சென்னை காவல்துறையினர் 350 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சூட்கேஸை வைத்துச் சென்ற தம்பதியை கண்டறிந்துள்ளனர்.
தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை? -ஆக. 8 நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்துள்ளது குறித்து...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக சரிவு
வடகொரியால் கடும் வெய்யில்! சூட்டைத் தணிக்க நாய் சூப் குடிக்க பரிந்துரை
வடகொரியாவில் கொளுத்தும் வெய்யில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊடகம் ஒரு புதிய சமையல் குறிப்பை வெளியிட்டு, வெய்யிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.
வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கை
உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்திக் கொள்கிறோம், அதற்கு மாறாக உங்களுக்கு பணம் தருவதாக யாராவது சொல்கிறார்களா? அப்படி என்றால், எச்சரிக்கையாக இருங்கள் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.